தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

326 கிலோ கடத்தல் குட்கா மதுபாட்டில்கள் பறிமுதல்

ஓசூர், ஜூலை 15: ஓசூர் அருகே மினிவேனில் கடத்தி வந்த குட்கா, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சிப்காட் பகுதியில், எஸ்ஐ அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த மினிவேனை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

அதில், குட்கா மற்றும் கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பைசல்(44) என்பதும், குட்கா மற்றும் மதுபாட்டில்களை பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு கடத்திச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 608 மதிப்புள்ள 326 கிலோ குட்கா மற்றும் ரூ.3,600 மதிப்புள்ள 48 மதுபாட்டில்களுடன் ரூ.2.50 லட்சரம் மதிப்புள்ள வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, பைசலை கைது செய்தனர்.

Advertisement

Related News