தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலுவை கடன் வசூலிக்க 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு: கூட்டுறவு இணை பதிவாளர் தகவல்

வேலூர், ஜூலை 24: கூட்டுறவு வங்கிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி உள்ளதாக இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்கள் பிரிவில் கடன் பெற்று, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக்கடன் தீர்வுத்திட்டம்-2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து இணைப்பு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு தவணை தவறி, நடப்பு 2023 மார்ச் 31ம் தேதி அன்றோ, அதற்கு முன்போ செயல்படாத ஆஸ்தி என வரையறுக்கப்பட்ட கடன்களை இத்திட்டத்தின் கீழ் தீர்வு செய்து கொள்ளலாம்.

இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், 9 சதவீதம் சாதாரண வட்டியுடன், மொத்தமாக 100 சதவீதம் நிலுவைத் தொகையை அரசாணை வெளியிடப்பட்ட 2025ம் ஆண்டு ஜூன் 24 முதல் 3 மாத காலத்திற்குள் ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம். கடன்தாரர்கள் வட்டிச்சுமையை கணிசமாக குறைக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, 9 சதவீதம் சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவை தொகையை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களை மேற்குறிப்பிட்ட 3 மாத காலத்திற்குள் தீர்வு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News