தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் தொழிற்சாலை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய 3 சிறுவர்களுக்கு வலை

புதுச்சேரி, மே 24: புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றுக்கு செல்லும் வழியில் முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவர் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கம்பெனியின் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர். இதில் ஒரு குண்டு தொழிற்சாலை கூரை மீதும், மற்றொன்று தொழிற்சாலை முன்பக்க சுவற்றின் மீது வீசப்பட்டதில், பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

Advertisement

இதையடுத்து தொழிற்சாலை ஊழியர்கள், வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கம்பெனியில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள மற்றொரு கம்பெனியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மூன்று நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, வெடிகுண்டு வீசி விட்டு தப்பி செல்வதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அகரம் புதுநகரை சேர்ந்த சிறுவன் மற்றும் கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள 3 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News