தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் திருமண விவகாரத்தில் வீடு புகுந்து சிறுவன் கடத்தல்: 3 பேர் கைது

திருத்தணி, ஜூன் 10: திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரத்தில் வீடு புகுந்து சிறுவனை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ் (23). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ (21) என்ற இளம் பெண்ணுக்கும் சமூக வளைத்தளம் மூலம் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் செய்துகொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறாது.

Advertisement

இந்தநிலையில் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதை தெரிந்துகொண்ட பெண்ணின் குடும்பத்தினர் திருவாலங்காடு அருகே களாம்பாக்காத்தில் உள்ள தனுஷ் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த தனுஷின் தம்பியான இந்திரசந்த் (16) என்ற சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றது. இதுகுறித்து தனுஷின் தாயார் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு புகார் செய்தார். இதற்கிடையே சிறுவனை கடத்தியவர்கள் மீண்டும் அழைத்து வந்து வீட்டில் விட்டனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனராஜா (55), மணிகண்டன் (49), கணேசன் (47) ஆகிய 3 பேரை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News