தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹3.64 லட்சம் ரொக்கம் பறிமுதல்

விருத்தாசலம், ஜூன் 19: பெண்ணாடம் பகுதிகளில் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக எஸ்பி ராஜாராமுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெ. பொன்னேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபுராஜ் மகன் கிருஷ்ணா, கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அமர்பிரித்சிங் என்பதும் காரில் பெண்ணாடம் பகுதியில் விற்பனைக்காக மூட்டை மூட்டையாக புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் போதை பாக்குகள் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

Advertisement

மேலும் நடத்திய விசாரணையில், பெண்ணாடம் வாள் பட்டறையில் உள்ள மோகன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து மோகனின் மளிகை கடை மற்றும் அவரது குடோனில் சென்று சோதனை நடத்திய போது குடோனில் இருந்த 4 மூட்டை புகையிலை பாக்கெட்டுகள், 6 மூட்டை போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் மற்றும் புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News