தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-4 பணிக்கான தேர்வை 29,129 பேர் எழுதுகின்றனர்

 

Advertisement

ராமநாதபுரம், ஜூலை 11: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள குரூப்-4 தேர்வை 29,129 பேர் எழுதுகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வு நாளை (ஜூலை 12) நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வில் 29,129 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வு 104 மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு பணியில் 28 நடமாடும் குழு, 11 கண்காணிப்பு குழு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்கள் முழுவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படவுள்ளது. தேர்வு அறையில் தேர்வு எழுத வருபவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை கண்காணிப்பு அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிரிவு அலுவலர் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News