தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

25 சவரன், பணம் திருட்டு வழக்கில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை எஸ்பி உத்தரவு திருவலம் அருகே வங்கி பெண் ஊழியர் வீட்டில்

திருவலம், ஜூலை26: திருவலம் அருகே வங்கி பெண் ஊழியர் வீட்டில் 25சவரன், பணம் திருட்டு வழக்கில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த குகையநெல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் பானுமதி(57). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் பெல் டவுன் ஷிப்பில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை வழக்கம்போல் வங்கிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 25 சவரன் தங்க நகை, ரொக்கம் ₹25ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வங்கி ஊழியர் பானுமதி திருவலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்பி மணிவண்ணனின் உத்தரவு பேரில் காட்பாடி டிஎஸ்பி சரவணன் பரிந்துரையின்படி காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் கைரேகை, சிசிடிவி கேமரா பதிவு குறித்து தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News