தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் 200 பேர் கைது

 

Advertisement

ஈரோடு, ஜன.23: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.சி.யு.) 200 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, சென்னிமலை சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான்கென்னடி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஜெகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரகு ராமன், சிஐ.டியு மாவட்ட தலைவர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முருகையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியில் இருப்பவர்களும், ஓய்வுபெற்ற ஊழியர்கள் இணைந்து இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இதில், அரசு போக்குவரத்துக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து உடனடியாக பேசி முடிவெடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 1-4-2003க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக சென்னிமலை ரோட்டில், காசிபாளையம் பிரிவை அடுத்துள்ள நகரக்கிளையில் இருந்து, அனைவரும் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டல தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீசார் மறியலில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement