தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெறிநாய்கடிக்கு 20 பேர் பாதிப்பு: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நகராட்சி, மருத்துவக்குழு ஆலோசனை

 

Advertisement

விழுப்புரம், ஜூலை 24: விழுப்புரம் நகரில் வெறிநாய்கடிக்கு 20 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நகராட்சி, மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் மகாராஜபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்கடித்து 20 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

மேலும் சிலர் மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று மகாராஜபுரம் அரசு மருத்துவமனையில் லட்சுமணன் எம்எல்ஏ சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்காணித்து சிகிச்சை அளிக்கவும், நகராட்சியில் தெருநாய்களை பிடிப்பது குறித்து நகராட்சி அலுவலர்கள், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது வெறிநாய்கடிக்குள்ளான 20 பேருக்கு தொடர்ந்து அடுத்தகட்ட சிகிச்சை அளிப்பது, நாய்களை பிடிக்க பிரத்தியேக வாகனம் வரவழைக்கப்பட்டு நகராட்சி மூலம் பிடித்து முற்றிலும் நாய்கள் தொல்லைகள் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்விபிரபு, நகராட்சி ஆணையர் வசந்தி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, மருத்துவ அலுவலர் ஜோதி, நகர செயலாளர் சக்கரை, வெற்றிவேல், நகரமன்ற உறுப்பினர் சத்தியவதிவீரா, ஜெயந்தி மணிவண்ணன், சாந்தராஜ், புருஷோத்தமன், ஜனனிதங்கம், மணவாளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement