தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாய நிலங்களில் புகுந்து 2 காட்டு யானைகள் அட்டகாசம் மா, தென்னை மரங்கள் சேதம் பேரணாம்பட்டு அருகே அதிகாலை பரபரப்பு

 

Advertisement

 

 

 

பேரணாம்பட்டு, மே 26: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் புகுந்து 2 காட்டு யானைகள் மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள், அரவட்லா, கோட்டையூர், எருக்கம்பட்டு, குண்டலபல்லி, கோக்கலூர், முத்துக்கூர், டிடி மோட்டூர், கொண்டமல்லி, பத்தலபல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. அங்குள்ள வனவிலங்குகள் உணவுகள் மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது அருகிலுள்ள விவசாய நிலங்களிலும், கிராமங்களிலும் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் விவசாய நிலத்தில் 2 காட்டு யானைகள் புகுந்து, 5 மின்வேலி கம்பங்களையும், மா மற்றும் தென்னை மரங்ளை முறித்து சேதப்படுத்தியது. மேலும் மாங்காய்களை சாப்பிட்டு கொண்டிருந்தது. யானையின் பிளீறல் சத்தம் கேட்டு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனே இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்து வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர் காலை 6 மணியளவில் வனத்துறையினர் காட்டு யானைகளால் சேதமான விவசாய நிலத்தினை பார்வையிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அதிகாலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News