தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தப்பியோடிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தீவிரம் பிறந்த நாள் விழாவில் வாலிபர் கொலை வழக்கு

வேலூர், ஜூன் 12: வேலூரில் பிறந்தநாள் விழாவில் வாலிபர் கொலை வழக்கில் தப்பியோடிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் வசந்தபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(25). இவர் மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பைக்குகள், செல்போன் திருட்டு குற்றவழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு நேரு நகரில் ஜெயபிரகாசின் நண்பன் பிறந்தநாள் விழா நடந்தது. அதில் ஜெயபிரகாஷ் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் ஐய்யப்பன், வசந்த், தனுஷ், சக்தி மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

Advertisement

பிறந்தநாள் விழாவில் அனைவரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் ஜெயபிரகாசிற்கும் அதே பகுதியை சேர்ந்த வசந்த், தனுஷ், சக்தி தரப்பினருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்த், தனுஷ் தரப்பினர் பீர்பாட்டில் மற்றும் அங்கு கிடந்த ஹாலோபிளாக் கற்கள் கொண்டு ஜெயபிரகாசை சரமாரியாக தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் தாக்கி உள்ளனர். அதனை தடுத்த ஐய்யப்பனையும் அந்த கும்பல் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடியது.

இதில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ், ஐய்யப்பனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக இருவரையும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நேற்று காலை 11 மணியளவில் ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐய்யப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்த், தனுஷ், சக்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அய்யனார், அருண்பாண்டியன், வேலு ஆகிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News