தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உவரி அருகே நடந்த விபத்தில் நாகர்கோவிலை சேர்ந்த 2 பேர் பலி

 

Advertisement

நாகர்கோவில், ஜூன் 3: உவரி அருகே காரின் முன்பக்கம் டயர் வெடித்தது காரணமாக பைக்கும், காரும் மோதிக் கொண்டதில் நாகர்கோவிலை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நாகர்கோவில் வடசேரி அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை(65), கோணம் அரசு ஐடிஐயில் பயிற்றுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது நண்பர் சேகர்(64) இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.

இருவரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டு இருந்தனர்.  அவர்கள் உவரி அருகே வரும்போது பொள்ளாச்சியிலிருந்து காரில் சிவபிரகாசம்(49) மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் கன்னியாகுமரி சென்று விட்டு திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது.

இதன் காரணமாக காரும், பைக்கும் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கிருஷ்ணபிள்ளை, சேகர் மற்றும் கார் டிரைவர் மணி(49), காரில் இருந்த சிவபிரகாசம் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். 4 பேரையும் மீட்டு திசையன்விளையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணபிள்ளை, சேகர் ஆகியோர் நேற்று அதிகாலையில் இறந்தனர். அவர்களது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை சொந்த ஊரான கிருஷ்ணன்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement