தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ- தனியார் பஸ் மோதி பூண்டு வியாபாரிகள் 2 பேர் பலி: போளூரில் பரிதாபம்

போளூர், மே 20: வேலூரில் வியாபாரம் செய்ய சென்றபோது, போளூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவும், தனியார் பஸ்சும் நேருக்குநேர் மோதி கொண்ட விபத்தில் பூண்டு வியாபாரிகள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா மகன் அசான்பாஷா(27). கடலாடி கீழ் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் வெற்றிச்செல்வன்(27). பூண்டு வியாபாரிகள். இவர்கள் இருவரும் லோடு ஆட்டோவில் பூண்டு ஏற்றிக்கொண்டு ஊர்ஊராக சென்று தினமும் வியாபாரம் செய்வார்களாம். அதேபோல், நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் ேலாடு ஆட்டோவில் பூண்டுகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்காக புறப்பட்டனர். வேலூரை சுற்றியுள்ள கிராமங்களில் பூண்டு விற்பனை செய்ய இவர்கள் திட்டமிட்டு வேலூர் நோக்கி வந்தனர்.ெதாடர்ந்து, போளூர் பைபாஸ் சாலையில் இரவு 11 மணியளவில் வந்தபோது, வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பஸ்சும் லோடு ஆட்டோவும் ேநருக்குநேர் மோதிக்கொண்டன.

Advertisement

இந்த விபத்தில் ஆட்ேடா கவிழ்ந்து நொறுங்கியது. மேலும், ஆட்டோவின் இடிபாட்டில் சிக்கிய அசான்பாஷா, வெற்றிச்செல்வன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து அசான்பாஷாவின் தந்தை சாதிக்பாஷா கொடுத்த புகாரின்பேரில் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்கு பதிந்து, விபத்து நடந்தவுடன் தலைமறைவாகிவிட்ட தனியார் பஸ் டிரைவரை தேடி வருகிறார். விபத்தில் 2 வியாபாரிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News