தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராமத்தில் நுழைய முயன்ற 2 யானைகள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், பிப். 13: குடியாத்தம் அருகே கிராமத்தில் நுழைய முயன்ற 2 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தானா, வி.டி.பாளையம், பூசாரி வலசை, கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்து நெல், மா, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் உதவியுடன் பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினால் மீண்டும் மீண்டும் யானைகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement

நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் 2 யானைகள் பயங்கரமாக பிளிறியபடி விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும், தீப்பந்தங்களை காட்டியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த யானைகள் மீண்டும் எப்போது ஊருக்குள் நுழையுமோ என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Related News