தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி

செங்கல்பட்டு, செப். 1: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்து மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களின் கால்நடைகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள ஏரியல் மேய்ச்சலுக்காக விடப்படுவது வழக்கம். அந்தவகையில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த சடகோபன் மற்றும் சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான பசுமாடுகள் நேற்று ஏரியில் மேய்ந்துகொண்டு இருந்தன.

Advertisement

அப்போது, ஏரியில் இருந்த மின் கம்பத்தின் மின்கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசிப்பட்ட 2 மாடுகள் ஏரியில் பரிதாபமாக உயிரிழந்தன. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மாட்டை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால், மின்சாரம் பாய்ந்தநிலையில் பொதுமக்கள் யாரும் ஏரியில் இறங்காமல் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வந்த மின்வாரிய பணியாளர்கள், மின் இணைப்பை துண்டித்தனர். அத்துடன் அறுந்து விழுந்த மின்கம்பியை அகற்றிவிட்டு புதிய கம்பியை கம்பத்தில் இணைத்தனர்.

Advertisement

Related News