தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் கலசங்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது

பெரம்பூர், ஜூன் 19: சென்னை புளியந்தோப்பு கனகராஜ் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(32). இவர், புளியந்தோப்பு பிகே காலனி 5வது தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை பராமரித்து வருகிறார். இந்நிலையில், கோயில் அருகே உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் பழுதடைந்ததால், அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு, புதிய வீடு கட்டித்தர அரசு ஏற்பாடு செய்த நிலையில், அங்கிருந்த கோயிலையும் இடித்து அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள பணிகளை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கோயில் மேற்கூரையில் இருந்த 5 கலசங்கள் மாயமானதைக் கண்டு பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

இதுகுறித்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோயில் கலசம் திருட்டில் ஈடுபட்ட அதேபகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், ஆவடி கவுரிபேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். ஓட்டேரி மேம்பாலம் அருகே உள்ள சாரதா 42 என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் இருந்து 5 கலசங்களையும் மீட்டனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இரும்பு கடை வியாபாரி சாரதா மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement

Related News