தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இயந்திரங்களை திருடிய 2 பேர் கைது ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும்

ஆரணி, ஏப்.22: ஆரணி அருகே ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை திருடிச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆரணி அடுத்த இரும்பேடு கிராமம் அருகே வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது மகன் பாலாஜி(27). அதே பகுதியில் ஹலோபிளாக் கற்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி பாலாஜி வழக்கம்போல் ஹலோபிளாக் கற்களை உற்பத்தி செய்துள்ளார். மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது ஹலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் 2 இயந்திரங்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

Advertisement

இந்நிலையில், ஆரணி அடுத்த சேவூர் பைபாஸ் சாலையில் தாலுகா இன்ஸ்பெக்டர் கார்த்திக்கா, எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பாலாஜியின் ஹலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை திருடிச்சென்றவர்கள் என்பதும், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோக்குமார்(25), வினோத்(20) என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News