தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னசேலத்தில் பைக் திருடிய 2 பேர் கைது

சின்னசேலம், ஆக. 29: சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பூங்கொடி கிராமம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(24). இவர் கடந்த 13.6.2024 அன்று மேல்நாரியப்பனூரில் நடந்த அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் மேல்நாரியப்பனூர் ரயில்வேகேட் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு திருவிழா பார்த்துவிட்டு, மீண்டும் சென்று பைக்கை பார்த்துள்ளார். அப்போது பைக் காணாமல் போயிருந்தது. இதையடுத்து சூர்யா சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சப்இன்ஸ்பெக்டர் நரசிம்ஜோதி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடத்தி வந்தனர்.

Advertisement

இந்நிலையில் சின்னசேலம் அடுத்த வீ.கூட்ரோடு பகுதியில் நடந்த வாகன தணிக்கையில் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் தலைவாசல் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(23), ஆத்தூர் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபு(28) என தெரிந்தது. மேலும் சின்னசேலத்தில் ஒரு பைக், கச்சிராயபாளையத்தில் ஒரு பைக், பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பைக், சேலம் மாவட்டத்தில் 2 பைக் என மொத்தம் 6 பைக்குகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 பைக்குகளை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்தனர்.

Advertisement

Related News