தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பண்ருட்டி அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

 

Advertisement

பண்ருட்டி, மார்ச் 19: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மருங்கூர் நெல்லடிக்குப்பம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சுனில் குமார்(25). இவரது தங்கை காவியா (22) என்பவரை மருங்கூரை சேர்ந்த ஜெகன் (26) எனபவரது தம்பி கலைச்செல்வன் என்பவர், அவரது வீட்டுக்கு தெரியாமல் அழைத்துக் கொண்டு சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்தன்று சுனில்குமாரை, ஜெகன் போனில் அசிங்கமாக திட்டியுள்ளார். பின்னர் ஜெகன் (26), கலையரசன், முரசு என்கின்ற தமிழ் முரசு (19), தேவா ஆகியோர் சுனில் குமார் வீட்டிற்கு சென்று அசிங்கமாக திட்டி கை மற்றும் தடியால் அடித்து தாக்கி, கத்தியால் தலையில் வெட்டினர். எங்களிடம் வைத்துக் கொண்டால் கொலை செய்து விடுவோம் என்றுகொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயமடைந்த சுனில் குமார் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் அளித்த புகாரின்பேரில், 4 பேர் மீது காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அதில் ஜெகன், தமிழ்முரசு ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement