தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டை- மயிலாடுதுறை முன்பதிவில்லாத ரயில்களில் 2 கூடுதல் பெட்டிகள் இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி

ராஜபாளையம், மே 15: ராஜபாளையம் வழியாக செங்கோட்டை-மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ரயில், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை-திண்டுக்கல்(16847/16848) எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை-செங்கோட்டை(06665/06662) பயணிகள் ரயிலை இணைத்து செங்கோட்டை-மயிலாடுதுறை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி முதல் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலாக 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

Advertisement

மயிலாடுதுறை-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரயில் 16 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் இரு ரயில்கள் இணைக்கப்பட்டு செங்கோட்டை-மயிலாடுதுறை ரயிலாக நீட்டிக்கப்பட்ட பின் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இருக்கை நிரம்பி பயணிகள் நின்று கொண்டு பயணிக்கின்றனர். ராஜபாளையம் வந்து உடன் பயணிகள் நிற்க கூட இடம் இன்றி படிக்கட்டுகள் அருகே நின்று பயணம் செய்து வருகின்றனர். இதனால் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்து 20 பெட்டிகள் உடன் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மே 25ம் தேதி முதல் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மே 26 முதல் மதுரை - செங்கோட்டை(56719/56720) பயணிகள் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைத்து 14 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News