தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 183 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு

வேலூர், மே 12: வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 130 சிறப்பு பஸ்களுடன், அலைஅலையாய் வரும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு கூடுதலாக 50 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியான நேற்று வழக்கமாக வரும் பக்தர்களை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரமாக நேற்று இரவு 8.53 மணி தொடங்கி 12ம் தேதி இன்று இரவு 10.48 மணி வரை குறிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்காக வழக்கத்தை விட, குறிப்பாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திருவண்ணாமலைக்கு வரலாம் என்பதால் அதற்கான சிறப்பு தற்காலிக பஸ் நிலையங்கள், மாற்றுப்பாதைகள் என அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

எனவே, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து மண்டலங்களில் இருந்தும் இயக்கப்படுகிறது. வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 130 பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கம் சார்பில் நேற்று காலை முதல் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் புதிய பஸ்நிலையத்தில் திருவண்ணாமலைக்கு செல்ல காலை முதலே பக்தர்கள் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். நாளை வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் முதல் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக மக்கள் அலை அலையாய் குவியத்தொடங்கினர். கட்டுக்கடங்கா கூட்டத்தால் வேலூர் புதிய பஸ் நிலையம் திணறியது.

இதனால் வேறு வழியின்றி வேறு மார்க்கங்களில் சென்ற பஸ்களை திருவண்ணாமலைக்கு திருப்பிவிட அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் முடிவு செய்தது. அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 130 சிறப்பு பஸ்களுடன் கூடுதலாக 50 பஸ்கள் என மொத்தம் 180 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 90 பஸ்களும் திருப்பத்தூரில் இருந்து 60 பஸ்களும் ஆற்காட்டில் இருந்து 30 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அதிகாரிகள் கூறுகையில், ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில், வேலூரில் இருந்து 90 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 60 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டிலிருந்து 30 சிறப்பு பஸ்கள் என 130 சிறப்பு பஸ்கள் இன்று(நேற்று) முதல் இயக்கப்படுகின்றன. எனவே பக்தர்கள் இந்த சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement

Related News