தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.1.48 கோடியில் 1734 நிழல் கூடாரம் தொழிலாளர்களின் நலன் கருதி நடவடிக்கை 100 நாள் வேலை திட்டத்தில்

கலசபாக்கம், ஜூலை 6: 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி ரூ.1.48 கோடியில் 1734 நிழல் கூடாரம் அமைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் வாழ்வாதாரத்தை உயர்த்திட இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 399 815 பெண் தொழிலாளர்கள், 231 462 ஆண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 60% ஒன்றிய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்து கூலி வழங்குகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவும், பிற்பகல் உணவு சாப்பிடவும் நிழற் கூடாரங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊராட்சிகளில் 1 தொகுப்புக்கு ஒரு நிழல் கூடாரம் ரூ. 8,580 மதிப்பீட்டில் அமைத்திட மாவட்டம் முழுவதும் 1734 நிழற் கூடாரம் அமைக்க ரூ.1 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 720 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 36 715 பெண் தொழிலாளர்கள், 14397 ஆண் தொழிலாளர்கள் என 51 112 தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். கலசபாக்கம் ஒன்றியத்தில் 97 தொகுப்புகளுக்கு தலா ரூ.8,580 கோடியில் கூடாரம் அமைக்க உபகரண பொருட்களை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன், பிடிஓக்கல் பாலமுருகன், ராஜேஸ்வரி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், துணை பிடிஓக்கள் அருள், அருண்குமார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.