தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மிருகண்டா அணையில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறப்பு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை கலசபாக்கம் பகுதியில் தொடர் மழையால்

 

Advertisement

கலசபாக்கம்,அக்.7: கலசபாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக மிருகண்டா அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம் உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் முழு கொள்ளளவு எட்டியதால் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் மிருகண்டா நதியின் கரையோரத்தில் உள்ள காந்த பாளையம், நல்லான் பிள்ளை பெற்றான், கெங்கல மகாதேவி, சிறுவள்ளூர், வில்வாரணி, எலத்தூர் ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை நீடித்தால் மேலும் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில் நேற்று எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் கேட்ட வரம் பாளையம், சிறுவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிருகண்டா நதி செல்லும் நீர்வரத்து கால்வாய்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏரிகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தினார்.

மிருகண்டா அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement