தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செய்யாறு அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து 14 சவரன் திருட்டு

செய்யாறு, ஜூன் 25: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன்(48), சாலை பணியாளர். இவரது மனைவி சசிகலா. இவருக்கு உதயகுமார் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் குடும்பத்தோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பீரோ திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது பீரோ இருந்த அறையில் இருந்து சிலர் தப்பி ஓடினர்.

உடனே செல்வன் குடும்பத்தினர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உதவியுடன் திருட வந்த நபர்களை பிடிக்கச் சென்றபோது அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். வீட்டினுள் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 14 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வன் நேற்று தூசி போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.