தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

13 பேரிடம் ₹95.29 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பல் கூறியதை நம்பி 13 பேர் ரூ.95.29 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த வெங்கடேசனுக்கு, அவரது நண்பர் ஆன்லைன் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஒரு வர்த்தக இணையதளத்தை பரிந்துரைத்துள்ளார். அதில் அவரும் பல பரிவர்த்தனைகளாக ரூ.92 லட்சம் முதலீடு செய்துள்ளார். பிறகு, சம்பாதித்த தொகையை எடுக்க முடியாமல் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

Advertisement

பனித்திட்டை சேர்ந்த அஸ்வினி என்பவருக்கு தெரியாத நபர் போன் செய்து நிதிநிறுவன ஊழியர் போல் பேசியுள்ளார். அப்போது, குறைந்த வட்டிக்கு ரூ.5 லட்சம் வரை கடன் தருவதாகவும், இதற்கு செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை உண்மையென நம்பி அவரும் தெரியாத நபருக்கு ரூ.1.49 லட்சத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். காமராஜ் நகரை சேர்ந்த ஜெயந்த் என்பவருக்கு ஆன்லைனில் திருப்பதி டூர் பேக்கேஜ் தேடியுள்ளார். பிறகு, ஆன்லைனில் கிடைத்த தெரியாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தெரியாத நபர் டூர் பேக்கேஜ் முன்பதிவுக்காக ரூ.25 ஆயிரம் பெற்று ஏமாற்றியுள்ளார்.

அரியாங்குப்பத்தை சேர்ந்த இளம்பரிதி என்பவர் பேஸ்புக்கில் குறைந்த விலைக்கு ஏசி விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். உடனே அவர் ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏசியை ஆர்டர் செய்துள்ளார். பல நாட்கள் கடந்த பிறகும் ஏசி வராமல் ஏமாந்துள்ளார். கோரிமேட்டை சேர்ந்த இருதயராஜ் சார்லஸ் என்பவருக்கு வங்கியில் இருந்து அனுப்பியதுபோல் ஒரு லிங்க் மெசேஜ் வந்துள்ளது. இதை அவரும் உண்மையென நம்பி, லிங்க் மெசேஜ் வழியாக சென்று பயனாளர் ஐடி, கடவுச்சொல், வங்கி விவரம் உள்ளிட்டவற்றை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து மோசடியாக ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஆன்லைன் மோசடி கும்பல் கூறியதை நம்பி ரூ.95.29 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News