தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 126 பேர் கைது

தேனி, ஜூலை 4: தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்ட ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த 126 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்க கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் தேனி அல்லி நகரத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு கூட்டு நடவடிக்கை குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமை வகித்தார். போராட்டத்தின் போது தமிழ்நாடு அரசு தொடக்க கல்வி அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை மாற்றுப் பணிக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தி வேறு மாவட்டங்களுக்கு மாற்றும் நடவடிக்கை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகள் 126 பேரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

Related News