தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மர்ம விலங்கு கடித்து குதறி 12 ஆடுகள் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 18: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பண்டசீமனூர் மந்தாளுகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமிநாயுடு(80). இவரது மனைவி சரோஜா(70). இவர்கள் 14 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில், 4 குட்டிகள் இருந்தது. நேற்று முன்தினம், வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு அருகேயுள்ள பட்டியில் அடைத்தனர். நேற்று காலை பார்த்தபோது, பட்டியில் இருந்த 4 குட்டிகள் உள்பட 12 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

Advertisement

மேலும், இரண்டு ஆடுகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த விஏஓ ரமேஷ், உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததா? அல்லது மர்ம விலங்கு எதுவும் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததா என தெரியவில்லை,’ என்றனர். அந்த பகுதியில் மர்ம விலங்குகள் எதுவும் சுற்றி வருகிறதா என வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement