தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 12 துணை பிடிஓக்கள் அதிரடி மாற்றம்

நெல்லை, ஜூன் 1: நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 12 துணை பிடிஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 உதவியாளர்களுக்கு துணை பிடிஓவாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் துணை பிடிஓக்கள் மாற்றம், உதவியாளர்களுக்கு துணை பிடிஓ பதவி உயர்வு அளித்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அதன்படி, அம்பாசமுத்திரம் ஒன்றிய கணக்கர் சுரேஷ் பதவி உயர்வு பெற்று நாங்குநேரி ஒன்றிய மண்டல துணை பிடிஓவாகவும் (மண்டலம்-1), நெல்லை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக உதவியாளர் பாலபார்வதி பதவி உயர்வு பெற்று அம்பை ஒன்றிய மண்டல துணை பிடிஓவாகவும் (மண்டலம்-2), பாளை ஒன்றிய கணக்கர் (திட்டப்பிரிவு) சரண்யாதேவி பதவி உயர்வு பெற்று சேரன்மகாதேவி ஒன்றிய மண்டல துணை பிடிஓவாகவும் (மண்டலம்-1), அம்பை ஒன்றிய கணக்கர் சண்முகவேல் பதவி உயர்வு பெற்று களக்காடு ஒன்றிய மண்டல பிடிஓவாகவும் (மண்டலம்-2) நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாங்குநேரி ஒன்றிய மண்டல துணை பிடிஓ (மண்டலம்-1) வைகுண்டபதி, களக்காடு ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (ஊராட்சிகள்), இப்பணியில் இருந்த இந்திரா, ராதாபுரம் ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (ஊராட்சிகள்), இப்பணியில் இருந்த கண்ணன் அதே ராதாபுரம் ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (பொது), இப்பணியில் இருந்து முத்துலெட்சுமி நாங்குநேரி ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (பொது), இப்பணியில் இருந்த சீனிவாசன் வள்ளியூர் ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (தணிக்கை), இப்பணியில் இருந்த சரோஜா, சேரன்மகாதேவி ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (சத்துணவு), சேரன்மகாதேவி ஒன்றிய மண்டல துணை பிடிஓ (மண்டலம்-1) ஆண்டாள் பாப்பாக்குடி ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (சத்துணவு) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

களக்காடு ஒன்றிய மண்டல துணை பிடிஓ (மண்டலம்-2) ஆறுமுகசாமி அம்பை ஒன்றிய மண்டல துணை பிடிஓவாகவும் (மண்டலம்-4), இப்பணியில் இருந்த கசாலி அம்பை. ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (ஊரக வேலை உறுதி திட்டம்), இப்பணியில் இருந்த சங்கரன், பாப்பாக்குடி ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (ஊராட்சிகள்), களக்காடு ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓ (பொது) சுப்பிரமணியன், அம்பை ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (சத்துணவு), இப்பணியில் இருந்த சிவா களக்காடு ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (பொது) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News