தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநியில் கார்பைடு கல் வைத்து விற்பனை 100 கிலோ மாம்பழங்கள் அழிப்பு: உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிரடி

 

Advertisement

பழநி, மே 29: பழநியில் கார்பைடு கல் வைத்து விற்பனை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ மாம்பழங்களை உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். பழநி அருகே ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி பகுதிகளில் மா மரங்கள் அதிகளவு உள்ளன. இங்கு செந்தூரா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, கிரேப், கல்லாமை மா வகைகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் மா வகைகள் தமிழகனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது மா சீசன் என்பதால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்ய ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் மா வகைகளில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வந்தது.

இதன் அடிப்படையில் நேற்று பழநி உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள் 15க்கும் மேற்பட்ட மாம்பழ குடோன்கள் மற்றும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆயக்குடியில் உள்ள 3 மாம்பழ குடோன்களி நடத்தப்பட்ட ஆய்வில் கார்பைட் கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 100 கிலோ மாம்பழங்களை கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக கடையின் கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து அபராதம் வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News