தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலத்த மழை, சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன

 

Advertisement

அவிநாசி, ஜூன் 4: அவிநாசி வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த கனமழை, பலத்த சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதற்கு உரிய இழப்பீட்டு தொகையை கணக்கிட்டு விரைவில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவிநாசி வட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அவிநாசி இராயம்பாளையம், கருமாபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக வாழைக்காய் குலை தள்ளிய நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மழைக்காற்றினால் முறிந்து சாய்ந்து சேதமடைந்தன.

இதனால் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு, பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளானதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து வருவாய்த்துறையினர், தோட்டக்கலைத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடனடியாக உரிய இழப்பீட்டு தொகையை கணக்கிட்டு, விரைவில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News