தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூரில் போலீசார் பறிமுதல் செய்த 1,350 கிலோ குட்கா எரித்து அழிப்பு; நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை

வேலூர், ஜூலை 7: வேலூரில் வாகன சோதனை, கடைகளில் பறிமுதல் செய்தது உட்பட 1,350 கிலோ குட்காவை, உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் எரித்து, மண்ணில் புதைத்து அழித்தனர். வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனை மற்றும் கடைகளில் பதுக்கி விற்ற குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல ஆண்டுகளாக குட்கா பொருட்கள் காவல் நிலையத்தில் இருப்பதால் இடமில்லாத நிலை ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, அந்த குட்கா பொருட்களை அழிப்பதற்கு காவல் துறை தரப்பில் கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டது. கோர்ட் அனுமதி அளித்தவுடன் போலீசார் மற்றும் வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் குட்கா பொருட்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ குட்கா பொருட்களை, விரிஞ்சிபுரம் பாலாற்றங்கரை ஓரத்தில் ஜேசிபி மூலம் 8 அடி ஆழம் பள்ளம் தோண்டி, அதில் குட்காவை போட்டு எரித்து அழித்தனர். பின்னர் மண் போட்டு மூடினர்.

Advertisement