உயர்கல்வி சேர்க்கைக்கு நாளை குறைதீர் கூட்டம்
விருதுநகர், ஜூலை 10: உயர்கல்வி சேர்க்ைக தொடர்பாக நாளை சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம். விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரி, தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான 4ம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 2025-26ம் கல்வியாண்டு மட்டுமின்றி அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். முகாமில் மாணவர்கள் உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான சந்தேகங்கள், கோரிக்கைகள் குறித்து குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.