நெல்லை IT ஊழியர் கவின் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது !
12:21 PM Aug 01, 2025 IST
திருநெல்வேலி: நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர போலீஸார் அவரைக் கைது செய்தனர். முன்னதாக நேற்று, கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.