Saturday, May 25, 2024
Home » “ஊழல்வாதிகளை அஸ்ஸாமிலும், மகாராஷ்டிராவிலும் முதல்வராக்கியவர் பிரதமர் மோடி” :அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

“ஊழல்வாதிகளை அஸ்ஸாமிலும், மகாராஷ்டிராவிலும் முதல்வராக்கியவர் பிரதமர் மோடி” :அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

by Porselvi

சென்னை : மோடி அவர்களாலேயே ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டபட்டவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் அஸ்ஸாமிலும், மகாராஷ்டிராவிலும் அவராலேயே முதல்வராக்கப்பட்டனர் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,”2015ல் சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது, விமானத்தில் இருந்து பார்வையிடுவது போன்ற போட்டோஷாப் செய்த படத்தை தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்து, கடும் கண்டனங்களுக்கு பிறகு நீக்கிய மோடி அவர்கள், வெள்ளத்தின் போது 24 மணி நேரமும் உழைத்த திமுகவை பார்த்து ஊடக பிரச்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்தியதாக குற்றம் சாட்டுகிறார்.

2014ல் தேர்தலுக்கு முன்பு “சுவிஸ் வங்கியிலிருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவந்து மக்களின் வங்கி கணக்குகளில் போடுவேன்” என்று சொன்ன மோடி அவர்களின் ஆட்சியில் பெரும் பணக்காரர்கள் வங்கியில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி, எந்த சிரமமும் இன்றி நாட்டைவிட்டு தப்பி செல்ல உதவியதே அவரது சாதனை. Panama Papers, Pandora Papers போன்றவற்றில் நம் நாட்டு பிரபலங்கள் சட்டத்துக்கு புறம்பாக, அயல் நாடுகளில் சொத்து சேர்த்துள்ளதாக வந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. லோக்பால் சட்டத்தால் உருவான அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இன்று வரை ஒரு வழக்கில் கூட குற்றத்தை நிருபிக்கவில்லை. மோடி அவர்களாலேயே ஊழல் வாதிகள் என குற்றம் சாட்டபட்டவர்கள் BJP ல் சேர்ந்ததும் அஸ்ஸாமிலும், மகாராஷ்டிராவிலும் அவராலேயே முதல்வராக்கப்பட்டனர்.

இப்படி ஒரு ஊழல் “ஒழிப்பு” சாதனை வரலாற்றை வைத்திருக்கும் மோடி அவர்கள் திமுகவை நோக்கி “ஊழல்வாதிகள்” என்று கூறவதை பார்த்து சிரிக்கத்தான் வேண்டும்.ஒன்றிய அரசு நிதி தராத போதும் மாநில அரசு மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ததை கூட மோடி அறியவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

You may also like

Leave a Comment

9 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi