‘‘ரயில்ல அரிசி கடத்தல் தடையில்லாம நடக்கிறதா புகார் வருதே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்ேபட்டை மாவட்டத்துல கோணம் பாதியான ஏரியாவுலவும், பாணத்துல தொடங்கி வரத்துல முடியுற ரயில் போகிற ஏரியாவுல ரேஷன் அரிசி கடத்தல் தடையில்லாம நடக்குதாம்.. கோணம் பாதியான ஊர்ல இருந்து ஆந்திராவுக்கு பட்டப்பகல்லயே, வெட்ட வெளிச்சமா, மூட்டைகளை அடுக்கி வெச்சி, ஒவ்வொரு பெட்டியிலயும் பத்து, பத்து மூட்டைகளாக ஏற்றி கடத்துறாங்களாம்.. அதேபோல பாணத்துல தொடங்குற ரயில் ஏரியாவுல இருந்து கர்நாடகாவுக்கு இரவு நேரங்கள்ல மூட்டை, மூட்டையாக அரிசி கடத்தல் நடக்குதாம்.. ரயில்வே காக்கிகள், உணவு கடத்தல் தடுப்பு காக்கிகள், வழங்கல் துறை என்று எந்த துறையும் கண்டுகொள்வதில்லையாம்.. மாசத்துக்கு ஒருமுறை மட்டும், கணக்கு காட்டுறதுக்கு பறிமுதல் நடக்குதாம்.. இது குயின்பேட்டை மட்டுமில்லாம, வெயிலூர், மிஸ்டர் பத்தூர் மாவட்டம் என்று ரயில்நிலையங்கள்ல தொடர்ந்து நடந்துகிட்டுதான் இருக்குது.. இப்படி கடத்துற அரிசி, ஆந்திரா, கர்நாடகாவுக்கு போன பின்னாடி, பாலீஷ் போட்டு திரும்பவும் தமிழ்நாட்டுக்கே அதிகவிலைக்கு சேல்ஸ் செய்ய வருதாம்.. இதனால மாவட்ட அதிகாரிங்க, ரயில் போக்குவரத்துலயும், சாலை போக்குவரத்துலயும் கண்காணிப்பை ஒருங்கிணைச்சு தீவிரமாக்க வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்க ெதாடங்கியிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயிலுக்கு கொண்டு வரப்படும் உணவுப்பொருட்களிலும் கூட கைவைச்சிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் ஒன்பது சென்ட்ரல் ஜெயில் இருக்குது.. இங்க சுமார் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் இருக்காங்க.. அவர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருது.. குறிப்பா சொல்லப்போனால், ஞாயிறுதோறும் சிக்கன் குழம்பு கொடுக்கிறாங்க.. ஆனால் சில சிறைகளில் கைதிகளுக்கு வாங்கப்படும் உணவு பொருட்களில் பெருமளவு மோசடி நடந்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு புகார் போயிருக்காம்.. அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறைக்குள் கொண்டு வருவாங்க.. அந்நேரத்தில் சிறை விஜிலென்ஸ் சோதனை போட உத்தரவு போடப்பட்டிருக்காம்.. என்னென்ன பொருட்கள் எவ்வளவு வாங்கப்படுது, அதன் அளவு என்ன என்பதை வீடியோவாக பதிவு செஞ்சி, தங்களுக்கு அனுப்ப வேண்டும்னு உத்தரவு போடப்பட்டிருக்காம்.. இதனால் சிறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைஞ்சிருக்காங்களாம்.. அதே நேரத்துல ஒவ்வொரு மத்திய சிறையிலும் விஜிலென்ஸ் பிரிவில் ஒரு எஸ்.ஐ. தலைமையில் 3 பேரு இருக்காங்க.. இவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் ரகசியமா இருப்பாங்க.. ஆனால் சில சிறைகளில் அதிகாரிகளோடு கைகோர்த்துக்கொண்டு நடைபோடுறாங்களாம்.. இவர்கள் சரகத்திற்குட்பட்ட கிளை சிறைகளுக்கு சென்று அவ்வப்போது ஆய்வு செய்யணுமாம்.. அதையும் அவர்கள் சரியாக செய்யாமல், சொந்த வேலையில் கவனம் செலுத்துறாங்களாம்.. இதனால சரியான தகவல் கிடைப்பதில்லையாம்.. தற்போது இவர்களை ரேஷன் பொருட்கள் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதால் அவர்களுக்கும் பெரும் சிரமம் இருப்பதாக சலிச்சிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரிசல்டை எதிர்பார்த்து கட்சி தாவ தேனிக்காரர் அணியில் ஐக்கியமான மாஜி அமைச்சர் ஒருத்தர் முடிவு பண்ணிருக்கிறதா அரசல்புரசலா பேசிக்கிறாங்களாமே தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியாக செயல்பட்டாங்க.. இதில் சேலம்காரர் கட்டுப்பாட்டுக்குள் கட்சி சென்றதும் தேனிக்காரர் அதிலிருந்து வெளியேறி தனி அணியாக செயல்பட்டு வர்றாரு.. டெல்டா மாவட்டத்தில் நெற்களஞ்சியம், மலைக்கோட்டை மாநகரில் உள்ள 3 மாஜி அமைச்சர்கள் தேனிக்காரர் அணியில் ஐக்கியமானாங்க.. இதில் மலைக்கோட்டை மாநகரை சேர்ந்த 2 மாஜி அமைச்சர்கள், தேனிக்காரருக்கு விசுவாசியாக இருந்து வந்தாலும் சேலத்துக்காரருக்கு எதிராக பெரிய அளவுக்கு ரியாக்ஷன் எதும் காட்டாமல் இருந்து வருகிறார்களாம்… சமீபகாலமாக தேனிக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சர் கு.ப. என ஆரம்பிக்க கூடிய ஒருவர் தற்போது தனி ரூட்டில் செல்ல ஆரம்பித்துள்ளாராம்…மலைக்கோட்டை மாநகரில் தேனிக்காரர் கலந்துகொள்ள கூடிய எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பது இல்லையாம்.. தேர்தல் ரிசல்ட்டை எதிர்பார்த்து அதன் பிறகு அவர் முக்கிய முடிவு கூட எடுக்க இருக்கிறாராம்.. மாற்று கட்சிக்கு தாவ கூட வாய்ப்பு இருக்குன்னு அவரது ஆதரவாளர்களுக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்… இந்த தகவலை தேனிக்காரரின் கவனத்துக்கு நிர்வாகிங்க உடனடியாக கொண்டு போயிருக்காங்க.. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தேனிக்காரர் அந்த மாஜி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
‘‘காக்கி துறை சேதி ஏதுமிருக்கா…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் காக்கிகள் ஆசியுடன் புதுவை மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறதாம்.. ஏற்கனவே விஷ சாராயம் அருந்தி சிக்கலில் சிக்கிய காவல் நிலையத்திற்கு பக்கத்து காவல் நிலையமான பிரம்மமான தேசத்தை கொண்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓமிப்பேர் கிராமத்தில் மீண்டும் புதுமையாக மது விற்பனை தலை தூக்கி உள்ளதாம்.. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் காக்கிகளுக்கு வாரா வாரம் தவறாமல் மாமூலாக கவனிப்பதால் புதுவை மது விற்பனை துவங்கி கலப்பட சரக்கு வரை தற்போது அமோகமாக விற்பனை நடந்து வருகிறதாம்.. ஏற்கனவே விஷசாராய விவகாரத்தில் காக்கி துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்தை மறந்து தற்போது ஸ்டேஷனில் புதுசா வந்த காக்கிகள் கரன்சி மழையில் நனைகிறார்களாம்.. இதை மாவட்டத்திலுள்ள மற்ற காக்கிகள் புலம்புவதுதான் ஹைலெட்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.