டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை காவல் நீடித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என கெஜ்ரிவால் கூறிய நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரப்பட்டது. அமலாக்கத்துறை காவல் நீட்டிப்புக்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
Suresh
சென்னை: டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 9,10-ல் நடந்த தேர்வு முடிவுகள் https://tancet.annauniv.edu/tancet-ல் வெளியிடப்பட்டது. எம்சிஏ, எம்பிஏ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பொறியியல், மேலாண்மை நுழைவுத்தேர்வை 36,139 பேர் எழுதினர். மதிப்பெண் சான்றிதழை ஏப்.3 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சேலம்: சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு ஏர்க்கப்பட்டது. சேலத்தில் 2 பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் செல்வகணபதி பெயர் இருப்பதாக கூறி அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக ஆட்சேபத்தை அடுத்து செல்வகணபதி மனு மீதான பரிசீலனை சிறிதுநேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. செல்வகணபதியின் வேட்புமனுவை பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர், அதனை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டத்துக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அழைப்பு விடுத்துள்ளார். ஏப்.4-ல் நடக்கும் கூட்டத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதம் முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களைக் கேட்டு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது. வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் தாக்கலான வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது
சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் தாக்கலான வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று பரிசீலனை தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,403 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும்.