Monday, June 17, 2024
Home » தூர்வாருவதாக பாவ்லா காட்டி பல கோடியுடன் எஸ்கேப் ஆன இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

தூர்வாருவதாக பாவ்லா காட்டி பல கோடியுடன் எஸ்கேப் ஆன இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Suresh

‘‘மூணு ஸ்டேட்ல இருந்து வர்ற கடத்தல் பொருட்களுக்கு தடையில்லா, தலைவாசலா இருக்குதாமே ஒரு செக்போஸ்ட்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல பட்டு என முடியும் தாலுகாவுல ஸ்டேட் பார்டர் இருக்குது.. இங்க காக்கிகள், பாரஸ்ட்ன்னு 2 செக்போஸ்ட் இருக்குது.. இந்த பார்டர் வழியாகத்தான், ஆந்திரா, கர்நாடகாவுல இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து போகுது.. பர்மிஷன் இல்லாம கொண்டுபோற கற்கள்ல இருந்து கிரானைட் கற்கள் வரைக்கும் எல்லாம் இந்த பக்கமாத்தான் போகுதாம்.. அதோட கர்நாடகாவுல இருந்து காய்கறி லோடு வாகனங்களும் இந்த வழியில தான் போகிறதாம்.. இப்படி ேபாற வாகனங்களுக்கு, 1 கே வரைக்கும் வசூல் நடக்குதாம்.. அதோட ரைஸ் கடத்தலும் தடையில்லையாம்.. அதுக்குன்னு மாசம் ஒரு கவனிப்பு நடக்குதாம்.. 3வது கண்ணுன்னு சொல்லுற கேமராக்களும் பழுதாகி வளைந்து போய் நிற்குதாம்.. இப்படி 2 செக்போஸ்ட்லயும் வசூல் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுதாம்.. இந்த வசூல தெரிஞ்சுக்கிட்ட டுபாக்கூர் ரிபோடர்ஸ் சில பேரு, வாரந்தோறும் போயி வாங்கிட்டு வந்துடுறாங்களாம்.. மூணு ஸ்டேட்டுக்கும், இந்த செக்போஸ்ட் தான் எல்லா கடத்தலுக்கும் தடையில்லாத தலைவாசலா இருக்குதாம்.. இதனால, மூணாவது கண்ைண சரி செஞ்சி, 2 டிபார்ட்மென்ட்லயும் களையெடுத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிச்சிக்கிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது ரொம்பவே அதிருப்தியில இருக்காராமே சேலத்துக்காரர் எதுக்காம்?…’’ என அடுத்த கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நிலவரம் தொடர்பாக ஒவ்வொரு பகுதியிலும் இலைக்கட்சியின் உண்மை நிலவரம் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பங்களிப்பு எப்படி இருந்ததுன்னு சேலத்துக்காரர் ரிப்போர்ட் அனுப்ப சொல்லி இருந்தாராம்.. அந்த வகையில், டெல்டாவில் உள்ள இலைக்கட்சியின் செயல்பாடுகள் குறித்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம்.. இதை பார்த்து சேலத்துக்காரர் கடும் டென்ஷனாகி விட்டாராம்.. முக்கியமாக, இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்டு கோபமடைந்து இருக்கிறாராம்.. தேர்தல் முடிவுக்கு பிறகு டெல்டாவில் இலைக் கட்சியில் மறுசீரமைப்பு பல செய்ய வேண்டிய உள்ளதுன்னு சேலத்துக்காரர் தெரிவித்துள்ளாராம்.. இந்த தகவலை கேள்விப்பட்ட இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிங்க கிலியில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூர்வாருவதாக பாவ்லா காட்டி பல கோடியுடன் எஸ்கேப் ஆன இலைக்கட்சி நிர்வாகிங்க மீது விவசாயிகள் கடும் கோபத்துல இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தில் பல காலமாக மூன்றுபோக விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த இலைக்கட்சி ஆட்சி காலத்தில் அப்பகுதியில் இருந்த கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதாக அறிவிச்சாங்க.. இதற்காக கோடிக்கணக்கில் நிதியும் ஒதுக்குனாங்க.. விவசாயிகள் சங்கத்தினரை முதன்மையாக வைத்து செய்யவேண்டிய பணிகளை, இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகளே டெண்டர் எடுத்து செய்வதாக களத்துல இறங்கினாங்க.. ஆனா, முதல் நாள் தூர்வாரும் பணி நடப்பதாக போட்டோ எடுத்ததோடு சரி.. அதற்கு அப்புறம் பெயரளவில் சில லட்சங்களை செலவு செய்து பணி நடப்பதாக பாவ்லா காட்டி விட்டு, பல கோடி பணத்துடன் எஸ்கேப் ஆயிட்டாங்க.. ஏற்கனவே, உள்ளதை அப்படியே விட்டிருந்தாலும் பிரச்னையில்லை. வேலை செய்கிறேன் பேர்வழி என இருப்பதையும், பயனில்லாமல் செய்துட்டாங்களாம்.. ஒழுங்கா தூர்வாராததால் 3 போகத்தில், ஒரு போக விவசாயம் முழுமையாக படுத்து விட்டதாம்… இதனால் விவசாயிகள், இலைக்கட்சி நிர்வாகிகள் மீது கடும் கொந்தளிப்பில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாய்க்கடி பீதி புதுச்சேரிவாசி மக்களையும் விட்டு வைக்கவில்லையோ..’’ என அச்சத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மதுவுக்கு பெயர் போன புதுச்சேரியில் தற்போது நாய்க்கடி பீதியில் நகர பகுதி மக்கள் உறைந்துபோய் இருக்காங்களாம்.. கடந்த வாரம் லாஸ்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து 7 பேரை கடித்து குதறிய நாயை பிடிக்க முடியாமல் நகராட்சி பணியாளர்கள் திணறிட்டாங்களாம்.. புலி வேடமிட்ட நாய் இரவு நேரங்களில் வீதிகளில் உலா வருவதால அப்பகுதி மக்கள் கடும் பீதியில் இருந்தாங்க.. இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன்னால அடுத்ததா நகர பகுதியான பெரியகடை மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளிலேயும் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோரை தெருநாய் கடித்து குதறிடுச்சாம்.. குட்டியை காணாத விரக்தியில் பொதுமக்களை நாய் விரட்டி விரட்டி கடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிச்சிருக்காங்க… காயமடைந்தவர்களோ சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நோக்கி ஓட்டம் பிடிச்சாங்களாம்…
இதேபோல் மேலும் சில தெருக்களிலும் வெறிநாய் கடித்து சிறார்களும் காயமடைந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்காங்களாம்.. இப்படி தொடர் நாய்கடி பீதி புதுச்சேரி வாசிகளை மிகுந்த கவலையில் தள்ளிடுச்சாம்.. இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்னு குரல் எழும்பி இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

fourteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi