சென்னை: மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். மண்ணச்சநல்லூர் தொகுதி கண்ணனூரில் மகளிர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்படுமா? என எம்.எல்.ஏ. கதிரவன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு சார்பில் 10, அறநிலையத்துறை சார்பில் 10, கூட்டுறவு துறை சார்பில் 1 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார். …