Sunday, June 2, 2024
Home » இலை தலைமை கொடுத்த நெருக்கடியால் தமிழக தாமரை தலைமை வாடிப்போனதை சொல்கிறார்: wiki யானந்தா

இலை தலைமை கொடுத்த நெருக்கடியால் தமிழக தாமரை தலைமை வாடிப்போனதை சொல்கிறார்: wiki யானந்தா

by kannappan

‘எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு… ஓவராக ஆடினா இப்படி தான் ஆப்பு வைப்போம்னு இலை கட்சியினர் மார்த்தட்டி பேசுகிறார்களே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அது எனக்கு தெரியாது… கேள்வி பட்டதை சொல்கிறேன். ஆரம்பத்துல இலையுடன் தான் கூட்டணி என்ற வார்த்தையோடு முடித்து இருக்கலாம்… அத விடு வேல் யாத்திரை ெகாடுத்த தெம்பால்… முதல்வர் வேட்பாளரை பற்றி வாய் திறந்து டெல்லியில் வாங்கிக் கட்டிக் கொண்டாராம். அதற்கு தமிழகத்தில் இருந்து சில இலை தலைகள் கொடுத்த அழுத்தமும் ஒரு காரணமாம். இன்னொரு காரணம், அதே கட்சியில இருக்கிற தாமரை நிர்வாகிகள் தானாம். தாமரை கட்சி தலைவருக்கு டெல்லி மேலிடத்தில் நெருக்கத்தில் இருக்கும் சிலர் போடும் கடிவாளத்திற்கும் கட்டுப்படுகிறாராம். நிருபர்களுக்கு பேட்டி அளிப்பதால் தான் பிரச்னையே… அதை தவிர்த்து விடுங்கள் என்று சொன்னாங்களம். இப்படித்தான் அதியமான் கோட்டை மாவட்டத்தில், ஆலோசனை நடத்த தாமரை தலைவர் வந்தாரு. கண்டிப்பாக தலைவர் பிரஸ்மீட் கொடுப்பாரு என்று மாவட்ட தலைவர் சொன்னாராம். மைக்கை நீட்டியவர்களிடம் பேச, தலைவரும் தயார் ஆனாராம். அப்போது உடனிருந்த மாநில செயலாளர் ஒருத்தரு, மீட்டிங் முடிச்சுட்டு பிரஸ்மீட் நடத்தலாம் பிரஸ் மீட்டை ‘கட்’ செய்துட்டாராம். மீட்டிங் முடிந்த பிறகு, அந்த மாநில செயலாளர் வந்து, பிரஸ்மீட்டே கேன்சல்னு சொல்லிட்டாராம். அதுக்கு தாமரை தலைவர் மறுப்பு தெரிவிக்காமல் தலையை ஆட்டினாராம். தேர்தல் நேரத்தில் ஏதாவது கருத்துச் சொல்லி, சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று அந்த இரண்டெழுத்து இன்சியல் மாநில செயலாளர் கருத்து சொன்னாராம். இதனால் தான், தாமரை தலைவரு பிரஸ்மீட்டை கேன்சல் பண்ணிட்டார் என்பது அங்கு மைண்ட் வாய்சாக ஒலித்தது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மண்ணில் கொள்ளையடிக்கும் மந்திரி பற்றிச் சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘திருப்பம் தரும் மாவட்டத்தில் ரயில் நிலையத்திற்கும், சுற்றுலாவுக்கும் பேர் போன சோலையான பேட்டையின் அசைக்க முடியாத சக்தியாக வீரமானவர் இருக்கிறாரு. இவரு தொகுதியில இருபதுக்கும் மேற்பட்ட ஏரிகள் இருக்காம். இதில் வீரமானவருக்கு நெருக்கமான ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை நிர்வாகிகளை சேர்ந்த நபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு அரசு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்கிறாங்களாம். இதில் ஒப்பந்ததாரர்கள் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிக்கு 20 சதவீதம் கமிஷன் வழங்கிவிட்டு டெண்டர் எடுக்கிறாங்க. இந்த பணிகளை மேற்கொள்ள மண், முரம்புக்கு நிறைய தேவை இருக்காம். இதனால் ஜேசிபி, டிப்பர் லாரி, டிராக்டர் போன்றவை வைத்துள்ள ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை, ஒப்பந்ததாரர்கள் அணுகி முரம்பு, மண் போன்றவற்றை வாங்கி சாலை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வேலை செய்யறாங்களாம். இதனால் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் தொடங்கி ஊராட்சி நிர்வாகிகள் வரை வீரமானவர் தொகுதியில் பல்வேறு ஏரிகளில் இரவு நேரங்களில் மண், முரம்பு போன்றவற்றை இரவில் கடத்தி கரன்சியாக பதுக்கி இருக்காங்களாம். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லையாம். அதையும் மீறி அதிகாரிகள் கொள்ளை நடக்கும் ஏரிப் பகுதியை ஆய்வு மேற்கொள்ள வருபவர்களை வீரமானவருக்கு போன் ேபாடட்டுமா என்று சொல்லி மிரட்டுகிறார்களாம். இதனால வேகமாக வரும் அதிகாரிகள் அடங்கி போய்விடுகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘‘சிவமான கங்கை மாவட்டத்துல இலைக்கும் தாமரைக்கும் யாரை அதிகாரியாக கொண்டு வருவதில் முட்டல் மோதல் ஏற்பட்டு இருக்காமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சட்டமன்ற தேர்தலை குறி வைத்து ‘தேசியக் கட்சியினர்’, சில மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறாங்களாம். இதற்காக மாவட்ட ‘உயர்நிலை அதிகாரியை’ அமர்த்துவதில், பிளான் போட்டு வேலை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் ‘சி’யில் துவங்கும் ஐந்தெழுத்து மாவட்டத்தில் ‘உயர்நிலை அதிகாரி’ மாற்றப்பட்டார். அந்த இடத்தில் கோவையை பூர்வீகமாக கொண்ட பெண் அதிகாரியை, கொண்டு வரும் முயற்சி ஆளுங்கட்சி சார்பில் நடந்ததாம்…ஆனால், ஏற்கனவே ஐந்தெழுத்து மாவட்டத்தின் தொகுதியைக் கேட்டு மல்லுக்கு நிற்கிற தேசியக் கட்சியினர், இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து, தங்களுக்கு சாதகமானவரை தற்போது உயர்நிலை அதிகாரியாக நியமிக்க வச்சிட்டதாக டாக் ஓடுது… இதனால் லோக்கல் ஆளுங்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம்… கூட்டணிக்குள் இருந்தபடியே குழி பறிக்கும் வேலை தேவையா’’ என வேதனையுடன் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘குமரியில தங்களை ஆளுங்கட்சியாக நினைத்து தாமரை நிர்வாகிகள் செயல்படறாங்களாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்ட தாமரை கட்சியில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக, பூத் கமிட்டி பொறுப்பாளர்களை வைத்து பொதுக்கூட்டம் நடத்த தயாராகி வருகிறார்களாம். அதுக்காக, ஒவ்வொரு பூத்துக்கும் 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் 250 பூத்துக்கு மேல் உள்ளது. 250X30 பார்த்தால் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இப்படி தான் அனுமதி கேட்டு, கடிதமும் கொடுத்துள்ளார்கள். கடிதத்தை வாங்கிய கலெக்டர் காவல்துறைக்கு அனுப்ப, காவல்துறை என்ன செய்ய என்று யோசித்து வருகிறதாம். முதலமைச்சர் வந்து போன விழாவுக்கு எல்லாம் கணக்கு பார்த்தா.. காவல்துறை அனுமதி கொடுத்தது என தாமரை கட்சிக்காரங்க கேட்பதுடன், இதுக்கே இப்படி யோசிச்சா, நாங்க நடத்த போற பொங்கல் விழாவுக்கு மாநில தலைவர்,  நடிகையை அழைத்து வந்து அசத்தப்போறோம்… அப்போது வர்ற கூட்டத்தை எப்டி கட்டுபடுத்துவீங்க… குமரி எங்க கோட்டை நாங்க மனு கொடுத்தா பர்மிஷன் கொடுத்தே ஆகணும்னு காக்கிகளிடம் சவால்விடுகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi