சென்னை: உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.