திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தகடை ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், காவிரிக்கு வரும் நீரை தடுப்பது ஏற்புடையது அல்ல என்பது தான் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு. கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றார்.
காவிரியில் அணை சட்டத்துக்கு எதிரானது கர்நாடகா அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
previous post