கோவை: வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. முழு உடல் பரிசோதனை செய்தபிறகே மலையேற வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாகவே செல்ல வேண்டும் கடந்த சில மாதங்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பக்தர்களுக்கான அறிவுரைகளை வனத்துறை வெளியிட்டது.
Ranjith
சென்னை: பாஜக மதரீதியாக பிரச்சனைகளை கிளப்பி வாக்குகளை பெறலாம் என்கிற குறுக்கு வழியை தேடிக் கொண்டிருக்கிறது. ஜுன் 4-ம் தேதிக்கு பிறகு இந்தியாவின் ஒரு மாற்று ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜக கூட்டணி என்பது 3-வது முறையாக ஆட்சி அமைக்க சாத்தியமல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை சார்பு நீதிமன்றம்
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம் தேதிக்கு உதகை சார்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சயான், மனோஜ், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தன் ஜாய், சதீசன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரும் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜாராகாததால் விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி: தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஜாமின் கோரிய வழக்கு இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கவிதா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா கடந்த மார்ச் 15-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை ஒட்டி ஏப்.23, 24-ல் 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் சாமி தரிசனத்துக்கு பின்னர் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.
பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை மற்றும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்தாண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் (புதன்கிழமை) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது.
இதையொட்டி திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. கோயிலுக்குள் வழக்கமாக உள்ள ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் முற்றிலும் ரத்து என திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்ததும் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்படும். அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!
கனடா: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் படைத்துள்ளார். 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை குகேஷ் வென்றார். கேன்டிடேட் சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 13வது சுற்றுகளின் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தார். நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா தலா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகருராவை கருப்புநிற காய்களுடன் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய குகேஷ் இந்த ஆட்டத்தை டிரா செய்தார்.
இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை பெற்றார். மறுபுறம் நெபோம்நியாச்சி – பேபியானோ காருனா இடையிலான ஆட்டமும் டிரா ஆனதால் குகேஷ் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். முடிவில் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் 17 வயது வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார். குகேஷ் தொடரை வென்றதன் மூலம் உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் தகுதியைப் பெற்றார்.