சென்னை: மின் வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையின் அதிகபட்ச மின் தேவை நேற்று முன்தினம் (ஏப்.24ம் தேதி) 4,335 மெகாவாட் ஆக பதிவாகி, கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதியன்று பதிவான அதிகபட்ச அளவான 4,300 மெகாவாட்டை தாண்டியது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நுகர்வோருக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.