மதுரை: கள்ளழகர் கோயில் ராஜகோப்புரத்துக்கு இன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. கோயிலில் ரூ.2 கோடியில் ராஜகோபுர பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து குடமுழுக்கு நடைபெறுகிறது. கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. குடமுழுக்கை ஒட்டி ஹெலிகாப்டர் மூலம் பூக்களை தூவ ஏற்பாடு செய்யபட்டுள்ளது.