ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் மாவட்ட கலெக்டரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க மூத்த வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசிய கலெக்டர் பிரபு சங்கரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் என 2 நாட்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன், துணைத்தலைவர் சாந்தகுமார், இணைச் செயலாளர் சூர்யா உட்பட 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் ஊத்துக்கோட்டை நீதிமன்றம் வெறிச்சோடி காணப்பட்டது.
நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
previous post