திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் ‘சிருஷ்டி 24’ என்ற தலைப்பில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் டி.தசரதன் தலைமை தாங்கினார். தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா, சுதர்சனம் வித்தியாசரம் பள்ளி இயக்குனர் சரஸ்வதி, இயக்குநர் சாய் சத்யவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி மகளிரின் சாதனைகள் குறித்து கவிதை வாசித்தார். இந்த விழாவில் ராஜூ மருத்துவமனை மனநல மருத்துவர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன்படி சவேரா நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, ஷோகா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி ஸ்ரீநிவாசன், இயற்கை விவசாய ஆர்வலர் மற்றும் மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸின் நிறுவனருமான அர்ச்சனா ஸ்டாலின் ஆகியோருக்கு சாதனை மகளிர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.