Sunday, September 1, 2024
Home » முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

by Karthik Yash

பொன்னேரி: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் காணியம்பாக்கம் ஊராட்சி சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காணியம்ப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. இதில், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய நிர்வாக கா.சு.தன்சிங், பாண்டுரங்கன், ஸ்டாலின், முனுசாமி, குணாளன், குமார், பார்த்தசாரதி, முரளிதரன், மீஞ்சூர் தமிழ் உதயன், அலெக்சாண்டர், அனுப்பப்பட்டு தேவராஜ், காட்டூர் ராஜேஷ், திருவெள்ளவாயல் ஹரி, வெற்றிச்செல்வி, மாரிமுத்து, ஞானவேல், மற்றும் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி மூத்த முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பொன்னேரி தொகுதி பழவேற்காட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நேற்றுமுன்தினம் மாலை ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்தும், 10 கிலோ அரிசி, வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது. மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் முகம்மது அலி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கூட்ட அரங்கில் அமைக்கப்பட்ட பந்தலில் பிரியாணி உணவை அனைவருக்கும் வழங்கினார். இதில், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாறன், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி, பொன்னேரி நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் கதிரவன், தலைமை திமுக பேச்சாளர் சித்திக் பாஷா மற்றும் பழவேற்காட்டு பகுதி திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

* ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை
ஊத்துக்கோட்டை பேரூராட்சி திருவள்ளூர் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு மணி தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் அபிராமி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல் ஆகியோர் வரவேற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, பூண்டி ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட ஓட்டுநரணி தலைவர் ஆனந்தகுமார், துணை தலைவர் விஜயகுமார், துணை அமைப்பாளர்கள் எல்லாபுரம் ராஜேஷ், ஜெபஸ்டீன், வாசு, ரமேஷ், சூர்யா இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், கும்மிடிபூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன், மாநில ஓட்டுநரணி துணை செயலாளர் உதயசூரியன் ஆகியோர் கலந்துகொண்டு, 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் சீனிவாசன், கோகுல்கிருஷ்ணன், ஜெயலலிதா, பேரூர் அவைத்தலைவர் வெங்கடேசன், துணைச் செயலாளர்கள் பார்த்திபன், திரிபுர சுந்தரி, பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

18 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi