சென்னை: நயினார் நாகேந்திரனுக்கு எதிரான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி நெல்லை சுயேச்சை வேட்பாளர் வழக்கு தொடர்ந்திருந்தார். வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.