குமரி: கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் உள்பட 3 கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Kalaivani Saravanan
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!
சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2021ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜேஸ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கு மார்ச் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொளத்தூர் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்ற திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: கொளத்தூர் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை தீட்டி பல சாதனைகளை செய்து வருகிறது திராவிட மாடல் அரசு. கட்டணமில்லா விடியல் பயணம், புதுமைப் பெண், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதி என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: நான் முதல்வன் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு தனி மகிழ்ச்சி. மகளிர் முன்னேற்றத்திற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.
சிறுமி கொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் “இந்தியா” கூட்டணி சார்பில் அமைதிப் பேரணி..!!
புதுச்சேரி: சிறுமி கொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் “இந்தியா” கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து “இந்தியா” கூட்டணி சார்பில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. பேரணியில் புதுவை காங். தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுள்ளனர். அமைதி ஊர்வலத்தில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றிருக்கின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் முதல்நாள் நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது..!!
தர்மசாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் முதல்நாள் நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கிராவ்லே 79, ஜானி பேர்ஸ்டோவ் 29 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா போதையில் தகராறு செய்தோரை கண்டிந்த நபர் கொலை..!!
சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா போதையில் தகராறு செய்தோரை கண்டிந்த நபர் கொலை செய்யப்பட்டார். கண்டித்து அனுப்பிய நபரை பின் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் குமார், அஜித்குமார், சிலம்பரசன், விக்கி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் நாளை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்..!!
புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் நாளை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். முத்தியால்பேட்டை சிறுமி கொலையை கண்டித்து அனைத்து நீதிமன்றங்களிலும் பணி பறக்கணிப்பு செய்யப்படுகிறது. புதுச்சேரியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி தரக் கூடாது: ஐகோர்ட் கிளை ஆணை
மதுரை: குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி தரக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை உரிமம் தருவது சட்டங்களுக்கு எதிரானது என கோர்ட் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் திருவாடனை தாலுகாவில் பாம்பார் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
பெட்ரோல், டீசல் கார்களை விட கூடுதலாக மாசுவை வெளியிடும் பேட்டரி கார்கள்..!!
டெல்லி: பெட்ரோல், டீசல் கார்களை விட பேட்டரி கார்கள் கூடுதலாக மாசுவை வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்டரி கார்களில் இருந்து கூடுதலாக 1850 மடங்கு கார்பன் துகள்கள் வெளியாவதால் சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதாக எமிசன் அனாலிட்டிக் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பேட்டரி கார்களில் பயன்படுத்தும் Synthetic Rubber டயர்களால் அதீத மாசு வெளியாவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.