சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வருடனான ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என். நேரு ஐ. பெரியசாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
Kalaivani Saravanan
சென்னை: 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மோடி அரசு எனக் கூறி வந்த பாஜகவினர் என்.டி.ஏ. அரசு என கூறுகின்றனர் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த ஏப்.19-க்குப் பின் மோடி பேச்சில் வியக்கத்தக்க மாற்றம் வந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஏப். 19 வரை தனது பிரச்சாரங்களில் மோடி புறக்கணித்து வந்தார். ஏப்.19-க்குப் பின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தனது பிரச்சாரங்களில் மோடி பயன்படுத்துகிறார் என ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்துத் துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
சேலம்: தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. ஒப்புகைச்சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தற்போது கருத்து கூற இயலாது என்றார். பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது பற்றி கருத்துக் கூற எடப்பாடி மறுப்பு தெரிவித்துவிட்டார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அதுப்பற்றி பேச இயலாது என கூறினார்.
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!
சென்னை: தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனம் தொடர்புடைய வீடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த புகாரில் பாஜக நிர்வாகி அகோரம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் அகோரம், குடியரசு ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மற்ற இருவர் ஜாமின் கோரில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வினோத், முன்னாள் ஒன்றிய செயலர் விக்னேஷ் ஆகியோர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.
“இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு கொடுத்ததில்லை”: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
சேலம்: இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு கொடுத்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியிலும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும், கேட்ட நிதியை கொடுத்ததில்லை. ஒன்றிய அரசில் திமுக அங்கம் வகித்த போதும், கேட்ட நிவாரண நிதி கிடைக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியைவிட குறைந்த அளவு நிதியையே ஒன்றிய அரசு அளிக்கும் என கூறினார்.
பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்: சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் பதிவு
சென்னை: பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர். சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.